search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டமளிப்பு விழா"

    • 785 மாணவிகள் மருத்துவம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று கவர்னர் ரவியிடம் அதற்கான சான்றுகளை பெற்றனர்.
    • நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவில் பெண்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    785 மாணவிகள் மருத்துவம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று கவர்னர் ரவியிடம் அதற்கான சான்றுகளை பெற்றனர். மேலும் 15375 மாணவிகள் பட்டம் பெற விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள் பட்டங்களை வழங்க உள்ளனர்.

    இதுதவிர 40 மாணவிகள் பதக்கங்கள் பெற்றனர். மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய கவர்னர் ரவி இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். சமீபத்தில் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பிய விஞ்ஞானிகள் குழுவிலும் பெண்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதுபோன்ற சாதனையாளர்களாக மாணவிகள் எதிர்காலத்தில் உருவாகவேண்டும் என்று பேசினார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி, பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் ஷீலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கவர்னர் ரவி கொடைக்கானல் வருகையை முன்னிட்டு மலைச்சாலை மற்றும் அவர் தங்கும் இடம், பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று பிற்பகல் கவர்னர் ரவி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    • 30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.
    • தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30-வது பட்டமளிப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி, டெல்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவில் 15,375 மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 785 மாணவிகள் நேரடியாக கவர்னரிடம் பட்டங்களை பெறுகின்றனர். 40 மாணவிகள் தங்களது துறைகளில் பதக்கங்கள் பெறுகின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் மாணவிகளுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல் நடத்துகிறார்.

    30-வது பட்டமளிப்பு விழாவில் 96 மாணவிகள் டாக்டர் பட்டம் பெறுகின்றனர். மேலும் 76 மாணவிகள் எம்.பில் பட்டம் பெறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இந்திய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் தலைமையில் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதன்முறையாக கொடைக்கானலில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அப்துல்கலாம் கலந்து கொண்டார். தற்போது 2-வது முறையாக கொடைக்கானல் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கலா, பதிவாளர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • லதா மாதவன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    மேலூர்

    அழகர் கோவில் அருகே கிடாரிப்பட்டிலுள்ள லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா நடந்தது. சேர்மன் டாக்டர் டத்தோ மாதவன் தலைமை தாங்கி னார். இதில் டாஃபே நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் மணி கண்டன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முருகன் வர வேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சரவணன் கலந்து கொண்டு மாணவர் களுக்கு பட்டங்களை வழங்கினார்.

    கல்லூரி முதல்வர்கள் வரத விஜயன், தவமணி, அனிதா, டீன் ஹேமலதா செயல் அலுவலர்கள் முத்துமணி மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், பி.ஆர்.ஓ. பிரபாகரன் துறை தலைவர்கள், பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
    • அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் .

    சென்னை:

    வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமையில்

    துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் முனைவர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை வேந்தர் முனைவர் ராம் பாபு கோடாலி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் கலந்து கொண்டு 33 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். விழாவில் மொத்தம் 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் நாகலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் பேசுகையில், பட்டமளிப்பு விழா என்றென்றும் மாணவர் வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும், ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திகழும். பிரதமர் மோடியின் விருப்பப்படி இளைஞர்கள் வேலை தேடுவதை விட வேலை வாய்ப்பினை உருவாக்கி பலருக்கு வேலை அளிக்க வேண்டும்.

    மாணவர்கள் சிந்தனைகளில் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனச்சிதறல்களுக்கு மத்தியில் நல்லொழுக்கப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (இந்தியா) பாலு சதுர்வே துலா கலந்து கொண்டார்.

    முன்னதாக வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் முனைவர் கோ.விசுவநாதன், சிறப்பு விருந்தினர் கவர்னர் இல.கணேசன் ஆகியோர் சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், வி.ஐ.டி. வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாக ராஜன், வி.ஐ.டி. வேலூர் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெய பாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
    • இஸ்ரோ விஞ்ஞானி ராஜன் பேச்சு

    நாகர்கோவில் :

    சுங்கான்கடை, வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் நடைபெற்றது.

    இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    இந்தியா ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, வடிவமைப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தலைசிறந்ததொரு அறிவு மையமாக இருந்து வருகிறது. இந்தியா உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை கொண்டு உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் இந்தி யர்களே, தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருக்கின்ற னர். நீங்கள் எந்தப் பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தாலும் சரி உங்களுக்கு பிடித்த துறையினை தேர்வு செய்யுங்கள். பெற்ற பட்டமே போதும் என்றில்லாமல் உங்களது விருப்பத்துறையில் இன்றளவும் உள்ள அறிவை வளர்க்க வேண்டும்.

    படித்து முடித்து விட்டோம் என்றில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் காலச் சூழலுக்கு ஏற்ப, தினம் தினம் புதிய மாற்றங்களை கொண்டு வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விழிப்புடன் இருந்து என்னால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு அறிவை பெருக்கும் வகையில் நேரத்தை செலவிடுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள் நீங்களும் விஞ்ஞானி களாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்பு கல்லூரியின் தலைவர் முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட் உறுதிமொழியை படிக்க அனைத்து பட்டம் பெற்ற மாணவர்களும் எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் டயானா, டீன் அலெக்ஸ் ராஜா பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள் பிரியா, டிவின், டெல்பின், நந்தபிரியா, சுனிதாகுமாரி, ராஜா கிங்ஸ்டன் ஆகியோர் விரிவுரையாளர்களுடன் இணைந்து செய்து இருந்தனர்.

    • மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தில் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
    • யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முதன்மை முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும், தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    இன்றைய விழாவின்போது, பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், பலருக்கு பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. இதுபற்றி கேட்டபோது போதிய நிதி இல்லை என்பதால் பதக்கம் வழங்கப்படவில்லை என நிர்வாகம் சார்பில் தெரிவித்ததால் மாணவர்கள், விழா நடைபெற்ற இடத்தல் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் இந்த தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி மறுத்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    தங்கப்பதக்கம் வழங்க நிதி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல் தவறானது. தகுதியான நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாருக்காவது விடுபட்டிருப்பின் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டால் பதக்கம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழா ஏற்பாடுகளில் சில சில குளறுபடிகள் இருந்திருக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்த வேண்டிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அரங்கத்தில் நடத்தப்பட்டதால் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்களால் பட்டம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வில் எந்தவித குளறுபடிகளும் நடைபெறவில்லை. குடியரசு தலைவர் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைதூர கல்வி நிலைய முறைகேடு புகார் என்பது பழைய புகார்; அது விசாரணையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் அது தாமதம் ஆகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.
    • உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும். எதிர்காலம் உன்னுடையது.

    சென்னை:

    பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கு வதற்கான சென்னை பல்கலைக் கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவே சென்னை வந்துவிட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு இன்று காலையில் முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.

    அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 10.15 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வருகை புரிந்தனர்.

    அதன் பிறகு சரியாக 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. அனைவரையும் பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி வரவேற்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி விழாவை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற 108 மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதக்கம் வென்றவர்களுக்கும், இன்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம்.

    நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக தமிழ்நாடு இருந்து வருகிறது. சங்க இலக்கியத்தின் செழுமையான பாரம்பரியம் இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் சொல்லப்பட்ட அறிவார்ந்த கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தொடங்கிய மாபெரும் பக்தி மரபு, மகான்களால் வடக்கே கொண்டு செல்லப்பட்டது.

    தமிழ்நாட்டு கோவில்களின் கட்டிடக்கலை, சிலைகள் மற்றும் சிற்பங்கள் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு. இளம் மாணவர்கள் உங்களிடம் உள்ள அபரிமிதமான வளமான கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் 21-ம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு சமூகத்தில் முக்கிய குடிமக்களாக மாற வேண்டும்.

    இந்த பல்கலைக்கழகத்திலும் அதன் இணைப்புக் கல்லூரிகளிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இன்று தங்கப் பதக்கம் பெற்ற 105 மாணவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    பெண்கள் கல்வி பயில்வதன் மூலம், நாடு முன்னேற்றம் அடையும். படித்த பெண்கள் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்க முடியும். பல்வேறு துறைகளில் தலைமைத்துவத்தை பெற முடியும்.

    1857-ம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். கல்வி அறிவைப் புகட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுகிறது. இது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது.

    165 ஆண்டுகளுக்கும் மேலான அதன் பயணம் முழுவதும் கல்வியாளர்களின் உயர் தரத்தை கடை பிடித்துள்ளது. அறிவுசார்ந்த ஆர்வத்தையும், விமர்சன சிந்தனையையும் வளர்க்கும் சூழலை வழங்குகிறது. எண்ணற்ற அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை உருவாக்கி, கற்றலின் தொட்டிலாக இருந்து வருகிறது.

    உலகளாவிய சூழலில் கல்வியில் அவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னை பல்கலைக்கழகம் ஒரு கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டு, இந்தியாவின் தென்மண்டலத்தில் பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகிறது.

    இந்தியாவின் 6 முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களாக பயின்றது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர். வெங்கட்ராமன், கே.ஆர். நாராயணன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றிய தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆவார்.

    இங்கு பயின்ற சர் சி.வி. ராமன் மற்றும் டாக்டர் எஸ்.சந்திரசேகர், நோபல் பரிசு பெற்றவர்கள். இவர்கள் அறிவியல் உலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இங்கு பயின்று இந்தியாவின் 2 தலைமை நீதிபதிகள், நீதிபதி எம். பதஞ்சலி சாஸ்திரி மற்றும் நீதிபதி கே. சுப்பாராவ் ஆகியோர் நீதித்துறையின் துறையை வளப்படுத்திஎள்ளனர்.

    சென்னை பல்கலைக்க ழகம் அத்தகைய சிறந்த அறிஞர்களை உருவாக்கி உள்ளது என்ற எண்ணமே, கற்றல் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சிறந்து விளங்குவதற்கு உங்களை கடினமாக உழைக்கச் செய்ய வேண்டும்.

    இந்தியாவின் நைட்டிங் கேல் ஸ்ரீமதி, சரோஜினி நாயுடு மற்றும் துர்காபாய் தேஷ்முக். ஆகியோரும் இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களே. சென்னை பல்கலைக் கழகத்தின் அனைத்து மாணவ-மாணவிகளும் இதன்மூலம் சிறப்பு உத்வேகத்தைப் பெற வேண்டும்.

    கடந்த மாதம், கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் நன்கொடைகளை வழங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுடன் நான் உரையாடினேன். கல்வி மற்றும் சமூகத்திற்காக பங்காற்றிய முன்னாள் மாணவர்களையும் பயனாளிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தச் சூழலில், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் உலகளாவிய சிறந்த மையமாக அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க முடியும். பல்கலைக்கழகம் அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது.

    எனவே அவர்கள் தங்கள் கல்வி நிறுவனத்திற்கு திரும்ப கொடுக்க முயற்சிக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள் இளம் மாணவர்களுக்கு வழிகாட்டலாம். பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்களை அணுகி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும்.

    சென்னை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கல்வி கடுமையின் கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளது. இது பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளை இயக்கி வரும் திறன்மிக்க மனித வளங்களை மேம்படுத்த உதவுகிறது.

    அதிநவீன ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யவும், இடைநிலை ஆய்வுகளை ஊக்குவிக்கவும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல்கலைக்கழகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மூலம் உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒரு நிறுவனமாக இந்தப் பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த முடியும். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.

    என் மனதில் பட்ட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். போட்டி நிறைந்த இன்றைய சூழலில், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அழுத்தம், நல்ல கல்வி நிறுவனங்களில் சேரவில்லையே என்ற பயம், மதிப்புமிக்க வேலையில் இறங்கவில்லையே என்ற பதட்டம், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளின் சுமை போன்றவை நம் இளைஞர்களிடையே கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

    இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நமது மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவதற்கும் நாம் ஒரு சமூகமாக ஒன்றிணைவது முக்கியம். எந்தவொரு கவலையும் உங்களை மூழ்கடிக்க வேண்டாம் என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். சில நேரம் அது தாமதம் ஆகலாம். உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள்.

    பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, மாணவர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை கடந்து செல்ல உதவலாம். இருவழித் தொடர்பை ஊக்குவிக்கும் சூழ்நிலையை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் பயம், கவலைகள் மற்றும் போராட்டங்களை பயப்படாமல் விவாதிக்க வசதியாக இருக்கும். சவால்களை தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் நமது இளைஞர்கள் அன்பாகவும், மதிப்புடனும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உருவாக்க நாம் கூட்டாகப் பணியாற்ற வேண்டும்.

    உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நீங்கள் தொடங்கும்போது, உங்கள் இலக்குகளை உயர்வாக அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உறுதியுடனும் அச்சமின்மையுடனும் உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கும் நாட்டிற்கும் மிகவும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க உங்களால் முடியும். எதிர்காலம் உன்னுடையது.

    இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

    இந்த விழா மூலம் சென்னை பல்கலைக் கழகத்தில் பயின்ற 1 லட்சத்து 4 ஆயிரத்து 416 பேர் பட்டம் பெற்றனர்.

    விழாவில் சென்னை பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.

    விழா முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கி உள்ளார்.

    இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று அவர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அந்த அரங்குக்கு பெயர் சூட்டி கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    • 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    கோவை,

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2020-21 கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது.

    அதன்பின் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பட்ட மளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பட்டம் முடித்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை தொடர முடியாமலும், பிற பல்கலைக்கழகத்தில் சேர முடியாமலும் வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாமலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுதவிர 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதன்படி பல்கலைக்கழகம் சார்பில் வருகிற 24-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 2021-2022 மற்றும் 2022-23 ஆகிய 2 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கும், பட்டங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம்.
    • மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 2010 முதல் 2017 வரை படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

    கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்றார். இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ பட்டம் பெற்ற 626 பேருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

    விழாவில் பேசிய கல்லூரி இயக்குனர் உதயசங்கர், முதலமைச்சர் ரங்கசாமியால்தான் இந்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டது. அவரது கையால்தான் பட்டமளிப்பு விழா நடக்க வேண்டும் என இறைவனின் ஆசி இருந்துள்ளது என்றார்.

    அடுத்து முதுநிலை மருத்துவ மாணவி மணிமொழி பேசும்போது, நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவள். எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரில் 3 பேர் பெண்கள். 3 பேருமே அரசு மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளோம். இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி தான் காரணம் என்றார். இவர்களின் பேச்சை கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி, உணர்ச்சி வசப்பட்டு வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்டார். இதைப்பார்த்து மேடையில் இருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    புதுவையில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளே இருந்தது. மாநில அரசுக்கு என ஒரு கல்லூரியை உருவாக்க அப்போது காங்கிரஸ் சார்பில் முதலமைச்சராக இருந்த ரங்கசாமி தீவிர முயற்சி செய்தார். இதற்கு பல தடைகளும், முட்டுக்கட்டைகளும் எழுந்தது.

    ஒரு கட்டத்தில் மருத்துவ கல்லூரியை மாநில அரசு கைவிடும் நிலைக்கு சென்றது. இதனையெல்லாம் தாண்டியே இந்த கல்லூரி திறக்கப்பட்டது. இதன் நினைவாகவே முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

    • அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    பரமக்குடி

    பரமக்குடி அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் மாணவ தலைவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி (எ) பாபு தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். எமனேஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில் மாணவர்கள் கடமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் அணில், ஆசிரியர் கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

    • சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்கப்பட்டன.

    விழுப்புரம்:

    இந்திய தேசத்தின் 76-வது சுதந்திர தின ஆண்டிணை முன்னிட்டு யூனிவர்சிட்டி ஆப் நியூ ஜெருசலம் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் இஸ்ரேல் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது பட்டமளிப்பு விழா புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20-க்கும் மேற்பட்ட சாதனையா ளர்களுக்கு மதிப்புறு முனைவர் விருது வழங்க ப்பட்டன. இவர்களில் கண்டமங்கலம் ஒன்றியம் வாணியம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை சரசு கல்விப்பணி, சமூகப்பணி, மற்றும் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஆற்றிய மனித நேயப் பணி இவற்றினை பாராட்டி சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. விவிலியம் ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் , சென்னை நீதிமன்ற நோட்டரி வக்கீல் தண்டபாணி , ரவிச்சந்திரன் , தேவமூர்த்தி இயக்குனர் அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்கள்

    • மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
    • பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா

    கன்னியாகுமரி :

    தலக்குளம் பி.எஸ்.நர்சிங் கல்லூரி 6-வது பட்டமளிப்பு விழா, நர்சிங் பள்ளி சில்வர் ஜூப்லி விழா, கல்லூரி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரி கலை அரங்கில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி சேர்மன் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அமுது முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜோஸ் பின் சுதா வரவேற்று பேசினார். தலக்குளம் பஞ்சாயத்து தலைவர் லெஷ்மி குமார் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் மூளை நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனியாண்டி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரோஜினி, குழந்தைகள் நல நிபுணர் மருத்துவர் சுனிதா, மருத்துவர் ஜீலியா, பி.எஸ்.ஆஸ்பத்திரி நிர்வாக அதிகாரி குற்றாலம்பிள்ளை, மக்கள் தொடர்பு அதிகாரி நாராயண பிள்ளை, எஸ்.பி.யின் தாயார், நர்சிங் கண்காணிப் பாளர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி ஊழி யர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனியாண்டி நன்றி கூறினார்.

    ×